கோணி வியாபாரி கொலை : 2 பேர் கைது செய்யப்பட்டனர் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை வேலூர் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜன். இவர் கோணி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் பானுமதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஷீலா என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கனகராஜ் அடிக்கடி ஷீலாவின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். ஷீலாவின் தம்பி ராஜீவ்காந்தி இதை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கனகராஜ் மீண்டும் ஷீலாவின் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜீவ்காந்தி, அவரது நண்பர் உதயமாங்குளம் உதயகுமார்(எ) உதயா(31) ஆகிய இருவரும் சேர்ந்து கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அம்மிக்கல் மற்றும் பீர் பாட்டிலால் கனகராஜை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய ராஜீவ்காந்தி, உதயகுமார் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்