அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ரேடியோகிராபர் 5, டயாலிசஸ் டெக்னீசியன் 10, இசிஜி டெக்னீசியன் 5, சி.டி. ஸ்கேன் டெக்னீசியன் 5, மயக்கவியலாளர் 15, மருந்தாளுநர்கள் 5 பணியிடங்கள் தலா ரூ.12,000 மாத ஊதியம் அடிப்படையிலும், லேப் டெக்னீசியன் 5 பணியிடங்கள் ரூ.15,000 மாத ஊதியம் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையோர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஆக.10-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதேபோல, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பணிக்காக முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் மருந்தாளுநர்கள், அனஸ்தீசியா, இசிஜி, டயாலிசிஸ் டெக்னீசியன்கள், ரேடியோகிராபர்கள், சி.டி ஸ்கேன் டெக்னீசியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (ஆக.4) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்கலாம் என கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago