ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், பாஷ் பவர் டூல்ஸ் டிவிஷன் சார்பில், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் அவளூர், தென்னேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் காத்திருப்பு அறை, சுற்றுச் சுவர், வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டிட மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி தலைமை வகித்தார். தனியார் நிறுவன மேலாளர் அப்துல் வஹாப் கட்டராகி, மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை வழங்கினார். ஹேண்ட இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் கிருஷ்ணன், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு பரிசு வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்