Regional02

- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி திமுக அரசைக் கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர்எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறும்போது ‘‘தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் திமுகஅரசு நிறைவேற்ற வில்லை.

மக்களுக்காக மாநில அரசுதிட்டங்களை செயல்படுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுத்து அதிமுக சார்பில் எந்தநேரத்திலும் திட்டங்களை பெற்றுத்தர தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

திருப்பூர்

உடுமலை

உதகை

SCROLL FOR NEXT