பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.101-ஐ கடந்தும், டீசல் விலை ரூ.95-ஐ கடந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களில் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், உயர்த்தப்பட்ட விலையை உடனடி யாக குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ்கட்சி சார்பில் நேற்று கையெ ழுத்து இயக்கப்போராட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் பேருந்து நிலை யம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கப்போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். திருப்பத்தூர் சட்டப்பேரவை பொறுப்பா ளர் பரத் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், நெடுமாறன், விஜயராகவன், சத்தியமூர்த்தி, மகேந் திரன், பாஸ்கர், மணி உட்பட பலர் கலந்து கொண்டு உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
வாணியம்பாடி பேருந்து நிலையத்தையொட்டியுள்ள பெட்ரோல் பங்க் முன்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாட்சா தலைமையிலான காங் கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி சென்றனர். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மண்டலத் தலைவர் ஜான், மாவட்ட துணைத் தலைவர் திருமால் முன்னிலை வகித்தனர். மாநகர காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் தலைமை வகித்தார். இதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர். இதில் நிர்வாகிகள் பரந்தாமன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம் புறவழிச்சாலை, நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். இதில், வாகனங்களுக்கு பெட் ரோல், டீசல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து பெற்றனர். மேலும், விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறு பான்மை பிரிவு தலைவர் நிஷாத்அகமது, பொதுக்குழு உறுப்பினர் விநாயகம், மாவட்ட சிறுபான்மை துறை ஊடக ஒருங்கிணைப்பாளர் முகமதுசாகிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago