திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர்விநியோகம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார் பதி பொறுப்பேற்றதில் இருந்து மாநகர மக்கள் முகநூல், ட்விட்டர், இணையதளம் மூலமாக மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். மேலும், கரோனா தடுப்பூசிபோடும் இடங்கள், தடுப்பூசி போடுவது குறித்த அறிவிப்புகள் தொடர்பாகவும் ட்விட்டர் மூலம் தகவல் அளித்து வந்தார்.
இந்நிலையில், திருப்பூர் மாநகர பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் குறித்து, கடந்த 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 10 நாட்களுக்கான அட்டவணை மாநகராட்சியின் இணைய தளபக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/water-supply-distribution/ என்ற இணையதளம் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் இடம் மற்றும் நாள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் எங்கெங்கு குடிநீர் விநியோகம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
3 mins ago
சினிமா
8 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago