சிவகாசி அருகே நாரணாபுரம் முருகன் காலனியில் தனியார் தீப்பெட்டி ஆலை இயங்கி வரு கிறது. நேற்று மாலை இந்த ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.