சிவகங்கை தனியார் மருத்துவமனைகளுக்கு : ஆக்சிஜன் விநியோகிக்க நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், இப்பிரச்சினையைத் தீர்க்க ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தனது தலைமையில் மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் கணேசன், தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் ஆகியோரைக் கொண்ட அதிகாரிகள் குழுவை அமைத்தார்.

இதற்கென வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி அதில் அரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆக்சிஜன் தேவை குறித்து தெரிவித்ததும், அதிகாரிகள் குழுவினர் மதுரை ஆலைகளில் ஆக்சிஜனை பெற்று உடனுக்குடன் வழங்கி வருகின்றனர். தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் சீரடைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

வலைஞர் பக்கம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

53 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்