விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
விருதுநகர் அல்லம்பட்டி முக்கு பகுதியில் போலீஸார் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு வேன்களில் கடத்தி வரப்பட்ட 14.5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அல்லம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையின் உரிமையாளர் கண்ணன் (45), வேன் ஓட்டுநர் மூர்த்தி (45) ஆகியோரை கைதுசெய்தனர். ரேஷன் கடை விற்பனையாளர் உமாமுருகேஸ்வரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
மானாமதுரை
இது தொடர்பாக மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த மணி (22), கதிர்வேல் (32) ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட வேனையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
7 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
2 mins ago
விளையாட்டு
23 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago