வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 922 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 211 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 43 ஆயிரத்தை கடந்துள் ளது. 2,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு தொற்று நேற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றுக்கு 4 பேர் இறந்துள்ளனர். 3,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 420 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால் கரோனாதொற்றுக்கு பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 43,968-ஆக உயர்ந்துள்ளது.36,620 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 447-ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
10 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
8 mins ago
சினிமா
26 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
20 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
34 mins ago
வலைஞர் பக்கம்
38 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
48 mins ago