மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஜோத்தம்பட்டி,காரத்தொழுவு, கடத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட குடிநீர் மின் இணைப்புகள் மற்றும் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட குடிமங்கலம் நான்கு சாலை, குமாரபாளையம், முத்து சமுத்திரம், சுங்கார மடக்கு ஆகிய பகுதிகளில் நாளை (மே 31) காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.