வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா நீர்த்தேக்க தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை முழுமையாக நிரம்பியுள் ளது. இந்த அணையில் இருந்து கே.வி.குப்பம் மற்றும் குடியாத் தம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், கே.வி.குப்பம் தொகுதி மக்களின் தேவைக்காக மோர்தானா அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கோரிக்கை வைத்துள் ளார். இது தொடர்பாக நிர்வளத்துறை அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினை நிலவிவரும் நிலையில், போதிய மழை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொகுதி மக்களின் நிலை குறித்து தங்களுக்கு நன்கு தெரியும் என்ற நிலையில், மோர்தானா அணையில் இருந்து கே.வி.குப்பம் தொகுதி மக்களுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள் ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
12 hours ago
வலைஞர் பக்கம்
12 hours ago