இலவச சட்ட உதவி :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரடங்கு காலத்தில் ஏற்படும் குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, முதியோர் எதிர்நோக்கும் இன்னல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலம்இலவச சட்ட உதவி பெற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்படும் பொதுமக்கள், தங்களது பெயர், பாலினம், வயது, முகவரி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, தங்களது குறைகளை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை dlsatiruvallur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9840760576 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கவேண்டும்.

பின்னர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின்வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவரை உடனடியாக தொடர்புகொண்டு, இலவச சட்ட உதவி வழங்குவார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்