நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ம.ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உதகை அரசு கலைக் கல்லூரியில் 2020- 2021-ம் கல்வியாண்டில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த, பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்தி, தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் மே, 2021-ல் நடைபெற உள்ள பல்கலைக்கழக இணையவழி தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையை பல்கலைக்கழக இணையதளத்தில் பெறலாம். இத்தேர்வுக்கு புதிதாக எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் இணைய வழித் தேர்வு எழுதுவதற்கான பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு, வகுப்பாசிரியர் மற்றும் துறைத் தலைவர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள் ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
இந்தியா
57 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago