தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நேற்று மாலை பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் தங்க ரதம் இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தாராபுரத்தில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகு திகளில் போட்டியிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும். திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. பணநாயகத் தின் மீது நம்பிக்கை வைத்தனர்.
இதற்கான விடை மே 2-ல் தெரியவரும். முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆட்சியில் பங் கேற்பது குறித்து எங்கள் கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும், என்றார்.