காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கால்நடை மருத்துவமனை சாலை, பேருந்து நிலையம், பச்சையப்பன் பள்ளி, மேட்டுத் தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
போட்டியில் ஆண்கள் பிரிவில் கே.அருண் முதல் பரிசும், எம்.விக்னேஷ் இரண்டாம் பரிசும், என்.ரமணா மூன்றாம் பரிசும் பெற்றனர். பெண்கள் பிரிவில் டி.நிரோஷா முதல் பரிசும், ஆர்.யுவராணி இரண்டாம் பரிசும், எம்.அர்ச்சனா மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெற்றி கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 mins ago
சினிமா
33 mins ago
இந்தியா
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
6 hours ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
3 hours ago