நிலக்கோட்டை தொகுதியை காங்கிரஸுக்குப் பெற்றுத்தராத மாநில காங்கிரஸ் தலைவரைக் கண்டித்து நிலக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நிலக்கோட்டை தொகுதி திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை நீண்டகாலம் காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி.
முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்மாளின் பேத்தியும் முன்னாள் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஜான்சிராணி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸார் இருந்தனர்.
இந்நிலையில் இத்தொகுதி மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து நிலக்கோட்டையில் காங்கிரஸார் தொகுதிப் பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அபிஷேக்அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.