கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம் மாவட்டத் தில் போக்குவரத்துக் கழகதொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டதால் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகதொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரிநேற்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர். இதில் தொமுச, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐடியூசி உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

கடலூர் மண்டலத்தில் மொத்தமுள்ள 586 பேருந்துக ளில் நேற்று காலை குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 80 சதவீத அரசுபேருந்துகள் இயக்கப்படாத தால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகினர்.

மேலும், நேற்று காலை கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநராக ஆட்டோ டிரைவரை வைத்து ஒரு பேருந்தை இயக்கியபோது முன்புறம் இருந்த பேருந்து மீதுமோதியதால் பதற்றமான தற்காலிக ஓட்டுநர் பேருந்தைநிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டார்.

தொமுச, சிஐடியூ உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 397 பேருந்துகள் இயக்க வேண்டும். ஆனால், வேலைநிறுத் தம் காரணமாக ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.இதனால், பணிமனைகளிலி ருந்து பேருந்துகள் வெளியே செல்லாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. திமுக உள்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்ததொழிற்சங்கத்தினர் பேருந்து களை இயக்க முன்வராத நிலையில், அதிமுக, பாமக,தேமுதிக ஆதரவு தொழிற் சங்க ஊழியர்களுடன் 40 சதவீதபேருந்துகள் மட்டும் இயக்கப் பட்டன.

மாவட்டத்தில் மாலை 4 மணிநிலவரப்படி 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கிராமப் புறங்களுக்குச் செல் லக்கூடிய பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால், நகரப் பகுதிக்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி கல்லூரி களுக்குச் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சுற்றுலா பேருந்து களை நேற்று சென்னை, திருச்சிக்கு கூடுதலாக இயக்கின. இதனால் சென்னைசெல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட வில்லை.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயங்கக்கூடிய 105 பேருந்துகளில் 5 பேருந்து மட்டுமே இயக்கப்பட்டன. மீதமுள்ள 100 பேருந் துகளும் போக்குவரத்துக் கழகபணிமனையில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. இதேபோல் சின்னசேலம் பணிமணையில் 40 பேருந்துகளில் 4 பேருந்து களும், சங்கரபுரத்தில் 35 பேருந்துகளில் 5 பேருந்துகள் மட்டும்இயக்கப்பட்டன. கள்ளக் குறிச்சி பேருந்து நிலையத்தில் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே இருப்பதால் பேருந்துநிலையத்தில் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் பணிமனைகளில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

34 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

39 mins ago

ஓடிடி களம்

57 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்