கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திக்கேயன் முன்னிலையில் மாற்று கட்சியினர் நேற்று திமுக வில் இணைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்இந்திலி, மாடூர், பொற்படாக் குறிச்சி, சிறுவங்கூர், உலகங்காத் தான் உள்பட 15 கிராமங்களில் இருந்து புதிய வாக்காளர்கள் 325நபர்கள், பாமக, அமமுக மற்றும்அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 275 நபர்களும் திமுகவில் இணைந்தனர். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டபொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் முன்னி லையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் காமராஜ் ஏற்பாட் டில் திமுகவில் தங்களை இணைத் துக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 நபர்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திக்கேயன் சால்வை அணி வித்து உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ் வில் பொறுப்புக் குழு உறுப்பினர் காமராஜ், நகர செயலாளர் சுப்புராயலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழி யன், பொறுப்புக் குழு உறுப் பினர்கள் முன்னாள் எம்எல்ஏ மூக்கப்பன், எத்திராஜ், லியாகத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
5 hours ago