Regional02

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரை காக்கா தோப்பில் உள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.1-ம் தேதி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநில துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT