விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸாரை கண்டித்து வியாபாரி தீக்குளிக்க முயற்சி

By செய்திப்பிரிவு

போலீஸாரை கண்டித்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த வியாபாரியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அருள்ராயன் (40). அப்பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர், மொபைல்போனில் ஆபாச படங்களை பிறருக்குப் பதிவேற்றம் செய்து கொடுப்பதாக சேத்தூர் போலீஸாருக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக அருள்ராயனை அழைத்து சேத்தூர் ஊரக இன்ஸ் பெக்டர் பவுல் விசாரணை நடத்தியுள்ளார்.

அருள்ராயன் அப்போது, தான் அவ்வாறு ஆபாச படங்களை பதிவேற்றம் செய்யவில்லை. தன் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண் டும் என்று அருள்ராயன் காவல் நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார். ஆனால், அந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தாமல் இருந்ததாகக் கூறப் படுகிறது. இதைக் கண்டித்து அருள்ராயன் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று தீக்குளிக்க உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீஸார் நேற்று தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் கேனுடன் வந்த அருள்ராயன் போலீஸாரிடம் சிக்கினார். அவரை சூலக்கரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்