காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழக முதல்வராக இருந்தவர் அண்ணாதுரை. அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர், அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் காஞ்சிபுரத்துக்கு பிரச்சாரத்துக்கு வர உள்ளனர். எதிர்கட்சி தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வருவர். காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்துக்கு வரும் திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகள் அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகின்றன.

இந்தச் சூழ்நிலையில் இந்த நினைவு இல்லத்தை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்