மின் பழுதை சரிசெய்ய சென்ற ஊழியர் உட்பட இருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் தொடர்மழையால் மின்பழுதை சரிசெய்யச் சென்ற மின் ஊழியர் ஒருவரும், அவருக்கு உதவியாகச் சென்றவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதை சரிசெய்யச் சென்ற மின் ஊழியர் பாக்கியநாதன்(41), தனக்கு உதவியாக அப்பகுதியைச் சேர்ந்த தயாளன்(42) என்பவரையும் அழைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சரிசெய்து கொண்டிருந்தபோது, கம்பிகளில் திடீரென மின்சாரம் வந்துள்ளது. இதனால் பாக்கியநாதன், தயாளன்இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரது உடலும்காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்