விருதுநகர் மாவட்டத்தில் 1,881 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.கே.எஸ்.எஸ்.என். நினைவு நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 16,27,128 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7,93,864 ஆண் வாக்காளர்களும், 8,33,081 பெண் வாக்காளர்களும், 183 மூன்றாம் பாலினத்தினர் உள்ளனர். 2021 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், நீக்கம், திருத்தம், இடமாற்றம் விரும்புபவர்கள் 16.11.2020 முதல் 15.12.2020 வரை விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,881 வாக்குச்சாவடி மையங்களில் 21 மற்றும் 22 தேதிகளிலும் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago