திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3,408 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 43,920 உறுப்பினர்களுக்கு ரூ.155.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் சார்பில், திண்டுக்கல்லில் நேற்று சுயஉதவிக்குழுகளுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் 3,408 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 43,920 உறுப்பினர்களுக்கு ரூ.155.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் நா.சரவணன், காந்திராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
14 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
30 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
52 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago