குமராட்சி அருகே உள்ள திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி கோயில் கும்போபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமராட்சி மெயின் ரோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி (75) கும்பபிஷேகத்தில் கலந்து கொண்டார். அவர் கோயிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில், கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதேபோல் கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி மீனம்மாள் (72). கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியும் திருடு போயிருந்தது. இவர்களின் முதுமையை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் திருடர்கள் செயின்களை திருடி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. புகாரின் பேரில் குமராட்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ 2 லட்சம் ஆகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
தமிழகம்
45 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
38 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago