தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர்எம்.மணிவண்ணன் தலைமை வகித்தார். கவுரவ பொதுச் செயலாளர் சி.குப்புசாமி முன்னிலை வகித்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும்மகளிர்குழுக் கடன் தள்ளுபடி குறித்த பல்வேறு கட்ட ஆய்வுகளை விரைவில் முடித்து தகுதியான நபர்களின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும்.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பயிர்க்கடன் விதிமீறல் என சுமார் 74 ஆயிரம் விவசாயிகளின் கடன்களை வசூலித்து தரும்படி அச்சுறுத்துவதை கைவிட வேண்டும். சங்கங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நலன் கருதி கருணை ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொருளாளர் ஏ.சேகர், மாநில துணைத் தலைவர்வி.எஸ்.நடராஜன் உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 secs ago
கல்வி
10 mins ago
விளையாட்டு
15 mins ago
தமிழகம்
23 mins ago
விளையாட்டு
36 mins ago
தமிழகம்
46 mins ago
சினிமா
50 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
இந்தியா
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago