காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடகாவை தடை வாங்க விடமாட்டோம் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டிருப்பதன் மூலம் தமிழ் படித்தோர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு புதிதாக நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தை தடை செய்யுமாறு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இத்திட்டத்துக்கு அம்மாநில அரசை தடை வாங்க விடமாட்டோம். உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கை. அதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
43 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago