பாளை. யோவான் கல்லூரியில் - நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடத்தவுள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்னோடி வங்கி மூலமாக சுய தொழில் செய்வதற்கு கடன் உதவி பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பங்களை நேரடியாக பெற்று தங்கள் விவரங்களை பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel-ல் இணைந்து பயன்பெறலாம்.

இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

36 mins ago

வாழ்வியல்

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்