வேலூரில் மாதாந்திர விவசாயி கள் குறைதீர்வு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதில், கடந்த மாதம் விவசாயி களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் பொதுப் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்’’ இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
வணிகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago