கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் விட்டுவிட்டுப் பெய்த மழையால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
கிருஷ்ணகிரியில் நேற்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி விடுமுறை அறிவித்தார். கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழைவிட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது.
இதனால் 6-ம் வகுப்பு முதல் கல்லூரி வரைக்கும் சிரமத்துடன் மாணவர்கள் சென்று வந்தனர். இதேபோல் பணிக்கு செல்வோர், சாலையோர காய்கறி வியாபாரிகள் என அனைவரும் அவதியுற்றனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இல்லாததால், குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பழுதான சாலைகள், மண் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியதுடன், நடந்து செல்லவே மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மிமீ) தேன்கனிக்கோட்டை 38, பாரூர் 35.2, ஊத்தங்கரை 33.6, நெடுங்கல் 27.6, அஞ்செட்டி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி தலா 23, தளி 25 , சூளகிரி, கிருஷ்ணகிரியில் 18 மிமீ மழை பதிவாகி இருந்தது.
பள்ளி வளாகம்
தருமபுரியில் கனமழை
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 47.20 மி.மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, மாரண்ட அள்ளி பகுதியில் 45 மி.மீ, ஒகேனக்கல் பகுதியில் 38 மி.மீ, பென்னாகரம், அரூர் பகுதிகளில் தலா 32 மி.மீ, தருமபுரி பகுதியில் 31 மி.மீ, பாலக்கோடு பகுதியில் 21.40 மி.மீ பெய்துள்ளது.கனமழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கத் தொடங்கியது. இரவு முழுக்க பெய்த தொடர் மழை காரணமாக தருமபுரி அடுத்த பாரதிபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 mins ago
தமிழகம்
7 mins ago
சுற்றுலா
11 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
21 mins ago
கல்வி
24 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
13 mins ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago