செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து : அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நேற்று முதல் தினமும் பேருந்து இயக்கப்படுகிறது.

செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என அமைச்சர் மஸ்தானிடம் செஞ்சி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை நேற்று தொடங்கியது. செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதி சென்று அடையும். பின்னர் திருப்பதியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு செஞ்சி வந்தடையும். இச்சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அப்போது தமிழ்நாடு அரசு (விழுப்புரம்) போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் துரைசாமி,மணி, செஞ்சி பணிமனை மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

க்ரைம்

39 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்