நெய்வேலியில் உள்ள தனி யார் பெட்ரோல் பங்கிற்கு கடந்த 21.07.2021-ம் தேதி வடக்குத்து பகுதியை சேர்ந்த அறிவழகன் (28) என்பவர் தனதுஇருசக்கர வாகனத்திற்கு பெட் ரோல் போட வந்தார். அவரை நெய்வேலி மேல்வடக்குத்து பகுதியை சேர்ந்த வீரமணி(23), நெய்வேலி மாற்றுக்குடி யிருப்பு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (23) ஆகியோர் வழிமறித்து ரூ.1,000 வழிப்பறி செய்தனர். இதுகுறித்து அறிவ ழகன் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், வீரமணி, மணிமா றன் ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வீரமணி மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளன. இவரின் குற்ற செய்கையை கட்டுபடுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி சக்திகணேசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் குண்டர் சட்டத்தில் வீரமணியை கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் உள்ள வீரமணியிடம் போலீஸார் அதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 secs ago
தமிழகம்
11 mins ago
இந்தியா
18 mins ago
க்ரைம்
36 mins ago
விளையாட்டு
31 mins ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago