திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் வாயில் முன் உறவினர்கள் சூழ மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகன். 
Regional01

கரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி - கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள் :

செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் களுக்குச் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது. முகூர்த்த நாளான நேற்று கோயில்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்த மண மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் காலை முதலே மணமக்களும், உறவினர்களும் கூடினர். கோயிலுக்குள் செல்ல முடியாததால் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாசல்களில் மணமக்கள் தாலி கட்டி, மாலை மாற்றிக் கொண்டனர். திருமண வீட்டார் மற்றும் பக்தர்கள் கோயில்கள் முன் திரண்டதால் போலீஸார் அவர்களை அதிக நேரம் கூடாமல் அனுப்பி வைத் தனர். மேலும் வரலட்சுமி விரதம், பிரதோஷத்தையொட்டி மீனாட்சி அம்மன் உட்பட சிவன் கோயில்களில் நேற்று பெண் பக்தர்கள் கோயில் வாசல்களில் நின்று வழிபட்டனர்.

திண்டுக்கல்

SCROLL FOR NEXT