நெல்லை மாவட்டத்தில் - மீண்டும் அதிகரிக்கும் கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று மீண்டும் அதிகரித்திருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்துவந்தது. கடந்த சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 15-க்கும் கீழாக குறைந்திருந்தது.

இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நேற்று திடீரென்று 29 ஆக அதிகரித்திருந்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நேற்று முன்தினம் 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருந்தது. வட்டார அளவில் பாதிப்பு எண்ணிக்கை:

ராதாபுரம், களக்காடு- தலா 4, அம்பாசமுத்திரம், மானூர், சேரன்மகாதேவி- தலா 2, வள்ளியூர்- 3, நாங்குநேரி- 1.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை யில் விழிப்பு ணர்வு முகாமும் நடத்தப்பட்டது.

ரயில்நிலைய மேலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்