சென்னை போலீஸார் அளித்த தகவலின்பேரில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த அந்நபரை கோவை மாநகர காவல்துறையினர் பிடித்தனர். அவரது பெயர் பீர்முகமது(37) என்பதும், இதற்கு முன்னர் 3 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பீர்முகமது கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.