மதுரை மாநகராட்சி பகுதியில் புதிய இரும்பு குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் ஜூலை 29-ம் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி பகுதிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் முதலாம் வைகை குடிநீர் திட்டத்தின் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
கீழமாரட் வீதி அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி பழைய குழாய்களை எடுத்து விட்டு புதிய இரும்புக் குழாய்கள், புதிய வால்வுகளை பொருத்தி குழாய்களை இணைக்கும் பணிகள் நடக்கின்றன. அதனால் வரும் 29-ம் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு:
10, 11, 12, 13, 14, 15, 16-வது வார்டுகளில் ஆரப் பாளையம் மேல்நிலைத் தொட்டி பகுதி 1, ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு, கோமஸ்பாளையம், ஹார்வி நகர், ஏ.ஏ.ரோடு, டி.டி.ரோடு, கண்மாய்க்கரை, முனிசி பாளையம், புது ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், மோதிலால் தெரு, கரிமேடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
17,18, 19 வார்டுகளில் ஆரப் பாளையம் மேல்நிலைத்தொட்டி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, மகபூப்பாளையம் மற்றும் அன்சாரி நகர் பகுதிகளிலும், 50, 51, 73 வார்டுகளில் கீழமாரட் 1-வது பகிர்மானம், தாசில்தார் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தை பொட்டல், கீழமாரட் வீதி, கரீம் பள்ளிவாசல், இஸ்மாயில்புரம், கீழவெளி வீதி, லட்சுமிபுரம் கான்பாளையம் மற்றும் குறுக்குத் தெருக்களிலும், 75 மற்றும் 100-வது வார்டுகளில் பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி, பழங்கா நத்தம், வசந்தநகர் 4-வது தெரு, திருவள்ளுவர் நகர், அக்ரஹாரம், தண்டைக்காரன் பேட்டை, 75 மற்றும் 76-வது வார்டுகளில் பழங்காநத்தம் மேல்நிலைத் தொட்டி 2-வது பகிர்மானம், பசும்பொன் நகர், கீழத்தெரு, நேரு நகர், அரசரடி மேல்நிலைத்தொட்டி, துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. 65, 66 வார்டுகளில் ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 1 முதல் பகிர்மானம்,தெற்கு மாசி வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி, மகால், சின்னக் கடைத்தெரு, பந்தடி தெரு, கான்சா மேட்டுத் தெரு, தெற்கு ஆவணி மூலத் வீதி, வெங்கலகடைத் தெரு, சப்பாணி கோவில் தெரு பகுதிகளிலும், 66பி, 67, 75, 85 வார்டுகளில் ஜான்சிராணி மேல்நிலைத் தொட்டி 2-வது பகிர்மானம், தென்னை ஓலக்காரத் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
67பி, 68, 69, 71பி, 72பி, 74பி வார்டுகளில் சில பகுதிகள் மற்றும் 52, 53, 54, 57, 70, 71 பி, 72பி, 69, 70, 71 வார்டுகளில் ஜோசப் பார்க் மேல்நிலைத் தொட்டி 1 மற்றும் சன்னியாசி ஊருணி மேல்நிலைத் தொட்டி பகுதிகள், காமராஜர்புரம் பகுதிகள், பாலரெங்காபுரம் மற்றும் சின்னக் கண்மாய் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
14 mins ago
க்ரைம்
18 mins ago
இந்தியா
16 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago