மிரட்டி எழுதி வாங்கிய நிலத்தை - மகனிடம் இருந்து மீட்டுத்தர தந்தை கோரிக்கை மனு :

By செய்திப்பிரிவு

மகன் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என விவசாயி ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னகந்திலி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரப்பன் (90). இவர், தனது பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா விடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘விவசாய தொழில் செய்து வந்த எனக்கு மூன்று மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் சின்ன கந்திலி பகுதியில் உள்ளது. இந்நிலையில், எனது 2-வது மகன் நாகராஜன் வீட்டில் நான் சில காலம் வசித்து வந்தபோது, அவர் என்னை மிரட்டி ஒரு ஏக்கர் 31 சென்ட் நிலத்தை அவர் பெயருக்கு எழுதிக்கொண்டார். இதனால் எனது 2 மகன்களும், 4 மகள்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, என்னை மிரட்டி எழுதி வாங்கிய நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் கொண்டு வரப்பட்ட மனுக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

5 mins ago

உலகம்

19 mins ago

விளையாட்டு

26 mins ago

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

55 mins ago

தமிழகம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்