மகன் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என விவசாயி ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னகந்திலி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரப்பன் (90). இவர், தனது பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா விடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘விவசாய தொழில் செய்து வந்த எனக்கு மூன்று மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் சின்ன கந்திலி பகுதியில் உள்ளது. இந்நிலையில், எனது 2-வது மகன் நாகராஜன் வீட்டில் நான் சில காலம் வசித்து வந்தபோது, அவர் என்னை மிரட்டி ஒரு ஏக்கர் 31 சென்ட் நிலத்தை அவர் பெயருக்கு எழுதிக்கொண்டார். இதனால் எனது 2 மகன்களும், 4 மகள்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, என்னை மிரட்டி எழுதி வாங்கிய நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் கொண்டு வரப்பட்ட மனுக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
சினிமா
5 mins ago
உலகம்
19 mins ago
விளையாட்டு
26 mins ago
ஜோதிடம்
8 mins ago
ஜோதிடம்
55 mins ago
தமிழகம்
45 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago