மதுரையில் கரோனாவால் பாதி க்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தார்.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவும்(31) கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 3 நாட் களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.