சிவகாசி காயாம்பு நகரைச் சேர்ந்தவர் காளிராஜன். இவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள புதுத்தெருவில் இயங்கி வருகிறது. இங்கு குறைந்த அளவு தொழிலாளர்களைக் கொண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தீப்பெட்டி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் ஆலையிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ஆனால், சிறிது நேரத்தில் ஆலைக்குள் இருந்து புகை வந்தது. இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஆலையிலிருந்த தீப்பெட்டி தயாரிப்பு இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
வணிகம்
12 hours ago
விளையாட்டு
12 hours ago