தென்காசி மாவட்டத்தில் 64 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு : அமமுக, மநீம, நாம் தமிழர், புதிய தமிழகம் சோகம்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் அமமுக, மநீம, நாம் தமிழர், புதிய தமிழகம் உட்பட 64 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

வாசுதேவநல்லூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 16,731 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அமமுக 4-ம் இடத்துக்கும், புதிய தமிழகம் 5-ம் இடத்துக்கும், சமக நோட்டாவை விட பின்தங்கி 7-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டன.

தென்காசி தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ராஜ் 15,336 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அமமுக 4-ம் இடம், மக்கள் நீதி மய்யம் 5-ம் இடம், புதிய தமிழகம் கட்சி நோட்டாவை விட பின்தங்கி 7-ம் இடம் பிடித்தன.

கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவிலில் அமமுக 3-ம் இடம், நாம் தமிழர் கட்சி 4-ம் இடம், மக்கள்நீதி மய்யம் 5-ம் இடத்தை பிடித்தன.

ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அ.ஹரி 37,727 வாக்குகள் பெற்று மூன்றாம்இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சி 4-ம் இடம், தேமுதிக 5-ம் இடம்,மக்கள் நீதி மய்யம் நோட்டாவை விட பின்தங்கி 7-ம் இடம் பிடித்தன. புதிய தமிழகம் கட்சி 8-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் முதலிடம்,இரண்டாம் இடத்தை பிடித்தவர்கள் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். ஆலங்குளம் தொகுதியில் முதல் 3- இடங்களை பிடித்தவர்கள் தவிர மற்றவர்கள் டெபாசிட் இழந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், சங்கரன்கோவிலில் 13 பேர், வாசுதேவநல்லூர் 9, கடையநல்லூர் 19, தென்காசி 16 மற்றும் ஆலங்குளம் தொகுதியில் 7 பேர் என 64 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி வேட்பாளர்கள் யாருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

உலகம்

7 mins ago

ஆன்மிகம்

5 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்