இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (23). கூலித் தொழிலாளி.இவர், 16.10.2018 அன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் மானூர்போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ராமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெபஜீவ ராஜா ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE