காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பிரிவுக்கு பல்வேறு இயந்திரங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம்நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு ஏ.சி. இயந்திரம், 4 யு.பி.எஸ். பேட்டரிகள் உள்பட பல்வேறு பொருட்கள் திடீரென்று மாயமாகி உள்ளன.
இவை காணமல்போனது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விஷ்ணு காஞ்சி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
இதுகுறித்து மருத்துவமனை தரப்பினர் கூறும்போது, "இப்பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள், தனியார் நிறுவன பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலரிடம் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா விசாரணை நடத்தியுள்ளார்.
இம்மருத்துவமனையில் உள்ளபொருட்கள், மருந்துகளின்மொத்த இருப்பு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago