மும்பை: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ‘‘நடிகர் ஆமிர் கானும் அவரது மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் எனினும், நண்பர்களாக தொடர்வோம் என்றும் சமீபத்தில் அறிவித்தனர். பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் உள்ள உறவு ஆமிர் கானுக்கும் கிரண் ராவுக்கு உள்ள உறவு போன்றது. முன்னாள் கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் இந்தியா - பாகிஸ்தான் போன்றவை அல்ல. எங்கள் அரசியல் பாதை வேறாக இருந்தாலும் நண்பர்களாக சேர்ந்திருக்கிறோம். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
‘‘சிவசேனாவும் பாஜகவும் எதிரிகள் அல்ல, நண்பர்கள்தான் அரசியலில் எதுவும் சாத்தியம்தான்’’ என்று பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.