வெயில் தாக்கம் அதிகரிப்பதால் - ஏசி பேருந்துகளின் சேவை 400 ஆக உயர்வு :

By செய்திப்பிரிவு

வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், அரசு போக்குவரத்துக் கழக ஏசி பேருந்துகளின் சேவை 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தேவைக்கேற்ப மேலும் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த மாதம் முதல் அரசு ஏசி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோடை காலம் நெருங்கவுள்ள நிலையில், வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏசி பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்

தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் ஏசி பேருந்துகளை இயக்கி வருகிறோம். கடந்த மாதம் வரை 40 சதவீத ஏசி பேருந்துகள் மட்டுமேஇயக்கப்பட்டன. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புகின்றனர். எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருக்கும் மொத்தமுள்ள 700 ஏசி பேருந்துகளில் 400 பேருந்துகளை மீண்டும் இயக்கிவருகிறோம். பயணிகளின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ஏசி பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்