இதுவரை 4,100 குழந்தைகள் மாயம் :

By செய்திப்பிரிவு

ஓட்டாவா: கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் கமிஷன் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி உறைவிட பள்ளிகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கனடாவில் சுமார் 150 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகளில் எத்தனை மாணவ, மாணவியர் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். எங்களது ஆய்வின்படி சுமார் 4,100 பேர் மாயமாகி உள்ளதாக கணக்கிட்டுள்ளோம். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின தலைவர்கள் கூறும்போது, "உறைவிட பள்ளிகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம். அவர்களின் இறப்பை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மறைத்துள்ளன. அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கம்லூப்ஸ் பள்ளியில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 215 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE