மனிதநேய மக்கள் கட்சி : வேட்பாளர்கள் அறிவிப்பு :

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி சார்பில் பாபநாசம் - ஜவாஹிருல்லா, மணப்பாறை - அப்துல் சமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சியின் தலைவர் .எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று இரவு அறிவித்தார்.

அதன்படி பாபநாசம் தொகுதியில் கட்சியின் தலைவர் .எம்.எச். ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமதும் போட்டியிட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE