திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி சார்பில் பாபநாசம் - ஜவாஹிருல்லா, மணப்பாறை - அப்துல் சமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சியின் தலைவர் .எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று இரவு அறிவித்தார்.
அதன்படி பாபநாசம் தொகுதியில் கட்சியின் தலைவர் .எம்.எச். ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமதும் போட்டியிட உள்ளனர்.