கிருஷ்ணகிரி: வழக்கில் கைது செய்யப்பட்டவரை, அவருக்கு சொந்தமான காரில் அழைத்து சென்ற சம்பவத்தில், தொடர்புடைய போலீஸ் எஸ்எஸ்ஐ, ஏட்டுவை, கிருஷ்ணகிரி எஸ்பி தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் கடந்த 8-ம் தேதி, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராம்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீஸார் கடந்த 11-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்திற்கும், தொடர்ந்து கிளைசிறைக்கும், காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அல்லது வாடகை வாகனத்திலேயோ அழைத்து செல்வது வழக்கம்.
ஆனால், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கை, ஓசூர் டவுன் எஸ்எஸ்ஐ செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோர், கார்த்திக்கு சொந்தமான காரில் நீதிமன்றத்திற்கும், பின்னர் கிளை சிறைக்கும் அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எஸ்எஸ்ஐ செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
45 mins ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வணிகம்
1 hour ago