தமிழகத்தில் 30+ ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக டி. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக சி.பழனி நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கே.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஆர்.வி.ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்னர். கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்தி குமார் பாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சாரு ஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநராகவும், கோவை ஆட்சியராக இருந்த சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

37 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்