சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு (97) இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து, கடந்த 24-ம்தேதி மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த நல்லகண்ணுவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நிலை சீராக உள்ளது
இதுகுறித்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது. பொதுப்பிரிவு மருத்துவர்கள், நுரையீரல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
க்ரைம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago